ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபன் காவ்யா இருவரின் திருமணம் முடிந்து அடுத்த நாள் வரவேற்பு நடத்த தயார் ஆனார்கள். அப்போது ஜீவா வாங்கி குடுத்த சேலையை பிரியா கட்டிக்கொண்டார். அதே போல் பார்த்திபன் காவ்யாவுக்காக பார்த்து பார்த்து வாங்கி வந்த சேலையை கட்டி இருந்தார். இதனால் சக்தி மாற்றி மாற்றி அவரது அக்காவையும் மாமாவையும் புகழ்ந்து தள்ளினார். அவர்களது அழகை வருனித்தார். பின் ஜீவா அவரது காதலை பிரியாவிடம் வெளிப்படுத்தினார். அவரால் முடிந்த வரை எல்லா வகையிலும் அவர் காதலை கூறினார். சின்ன குழந்தையிடம் கடிதம் கொடுப்பது, பூ கொடுப்பது என்று முடிந்த வரை பிரியாவை கவர முயற்சி செய்தார். பின் பிரியாவும் உங்கள் காதலை ஏற்றுக்கொள்ள அவருக்கு ஒரு சத்தியம் செய்து தர வேண்டும் என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…