Tamizhum Saraswathiyum Today Episode | 03.05.2023 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, வசுந்தரா குழந்தையுடன் கோதை வீட்டுக்கு திரும்பினார். வந்ததும் குழந்தையை அனைவரும் கொஞ்சினார்கள். ஆனால் சந்திரகலா கோதையிடம் தன்னால் முடிந்த அளவு தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் இந்த வீட்டுக்கு திரும்பி வரவேண்டும் என்று கூறினார். என்ன இருந்தாலும் அவர்கள் இந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் தானே என்று அவர்களுக்கு ஆதரவாக பேசினார். ஆனால் அதற்கு ராகினி தேவை இல்லாமல் கத்தினார். தனது கணவனை கொலை செய்ய முயற்சி செய்தவனை எப்படி இந்த வீட்டில் விடுவது என்று கோவமாக பேசினார். ஆனால் சந்திரகலா பேசியதை கோதை கேட்கும் நிலையில் இல்லை. கோதை அவரது முடிவில் உறுதியாக இருந்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author