தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் கம்பேனியில் தங்களுக்கு ஒரு வேலை போட்டு தருமாறு ஷண்முகம் மற்றும் சிலர் கேட்டுக்கொண்டார்கள். ஆனால் தமிழ் அதற்கு முதலில் சம்மதிக்கவில்லை. தான் இவர்களை வேலைக்கு எடுத்தால் கண்டிப்பாக தான் வேண்டும் என்றே செய்வது போல் இருக்கும் என்று யோசித்தார். ஆனால் அவர்கள் இங்கு வேலைக்கு வரவில்லை என்றால் kandippg வேறு ஒரு கம்பேனிக்கு செல்லத்தான் போகிறோம் என்று கூறினார்கள். இதை கேட்டதும் தமிழ் உங்களை போல் நல்ல உழைப்பாளியை இழக்க வேண்டாம் என்று நினைத்தார். அதனால் இங்கேயே அனைவரும் வேலை செய்யட்டும் என்று கூறினார் தமிழ். அதே நேரம் கொதைக்கு கார்த்திக் செய்த காரியங்கள் தெரியவந்தது. அவர் இனிமேல் விலை குறையும் என்று நம்பி தேவைக்கு அதிகமாக கம்பேனிக்கு பொருட்களை வாங்கி சேர்த்து இருப்பது தெரிய வந்தது. இதனால் கோதை அவரை திட்டித்தீர்த்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….