மகாநதி தொடரில் இன்று, காவேரியை நிவின் காதலிக்கிறார் என்பது தெரிந்து ராகவ் கோவத்தில் இருந்தார். இதனால் யமுனாவை எதாவது செய்ய வேண்டும் என்று நினைத்து திட்டம் போட்டார். அதற்காக அவரை சந்தானம் பணம் கொடுத்தற்கு ஆதாரம் ஒரு நபரிடம் உள்ளது. அவரை பார்க்க போகலாம் என்று அழைத்தார். அதையும் யமுனா நம்பினார். அருகில் தான் என்று அழைத்தார். அவரும் கிளம்பினார். போகும் வழியெல்லாம் அவருக்கு ஆசை வார்த்தை பேசி நம்பிக்கை கொடுப்ப்பது போல் பேசினார். யமுனாவும் அதை நம்பினார். அருகில் என்று சொல்லி திண்டுக்கல் வரை அழைத்து வந்து ஒரு அறையில் விட்டார். இங்கு தான் அந்த நபர் வந்து நமக்கு தேவையானதை கொடுப்பார் என்று கூறினார் . அதே நேரம் வீட்டுக்கு யமுனா இன்னும் வரவில்லை அனைவரும் பதட்டம் ஆனார்கள். 5 மணி ஆகியும் வரவில்லை என்று பதரினார்கள். ஆளுக்கு ஒரு பக்கம் தேட ஆர்மபிதார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….