மகாநதி தொடரில் இன்று, யமுனாவை தேடி அலைந்தார்கள் அவரது அக்கா மாமா அனைவரும். கடைசியில் ராகவ் இருக்கும் இடத்துக்கு போய் சேர்ந்தார்கள். குமரன் ராகவை பார்த்து கோவத்தில் கத்தினார். யமுனா இங்கே இருக்கிறாள் என்று விசாரித்தார்கள். ஆனால் அவர் எனக்கு தெரியவே தெரியாது என்று கூறினார். ஆனால் அதை காவேரி நம்பவே இல்லை. எனக்கு கண்டிப்பாக இவன் தான் கூட்டி வந்து இருக்க முடியும் என்று கூறினார். நிவின் கூட எப்படியாவது உண்மையை வாங்கி விடலாம் என்று முயற்சி செய்தார். ஆனால் ராகவ் அவருக்கு எதுவுமே தெரியாது என்று கூறினார். பின் அங்கு உள்ள அத்தனை இடத்திலும் தேடி பார்த்து கடைசியில் ஏமாற்றத்தில் கிளம்பவும் செய்தார்கள். ஆனால் அங்கு வெளியே யமுனாவின் செருப்பு தனியாக கிடப்பதை பார்த்து குமரன் அதிர்ச்சி அடைந்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….