Mahanadhi Serial Today Episode | 23.05.2023 | Vijaytv

மகாநதி தொடரில் இன்று, நிவின் காவேரிக்கு அழைத்து நர்மதாவின் நிலை, அம்மா என்ன செய்கிறார் என்று அக்கறையோடு விசாரித்தார். எது நடந்தாலும் நான் கண்டிப்பாக உதவிக்கு வருவேன், எதுவாக இருந்தாலும் என்னிடம் சொல்லலாம் என்று கூறினார். அவரின் ஆறுதல் காவேரிக்கு பிடித்து இருந்தது. அடுத்த நாள் சாரதா வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்தார்கள். வந்தவர்கள் அவர்களது மனம் நோகும்படி பேசினார்கள். உடனே நர்மதாவை டாக்டரிடம் அழைத்து சென்று பார்க்க வேண்டும், இல்லை என்றால் பின்னாடி பிரச்சனை ஆகி விடும் என்று கூறினார்கள். அதை கேட்டதும் காவேரி கத்தினார். ஆனாலும் விடாமல் உங்களது நள்ளதற்கு தான் சொல்லுகிறோம் என்று கூறினார்கள். ஆனால் காவேரி மற்றும் சாரதா அவர்களை வீட்டை விட்டு வெளியே அனுப்பினார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author