மகாநதி தொடரில் இன்று, யமுனாவை ராகவ் அடைத்துவைத்து அடித்ததால் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று வந்தார்கள். அதை பார்த்த அக்கம் பக்கத்தில் ஆள் ஆளுக்கு ஒவ்வொரு மாதிரி கதை கட்டி பேசினார்கள். இருந்தும் அதை தாண்டி வர முயற்சி செய்தால் அதற்குள் குமரனை கைது செய்து விட்டார்கள். அவரை தேடி வந்த சாந்தி கத்த ஆரம்பித்தார். என் மகனை இந்த கங்கா எதோ செய்து மயக்கி அவனை திருமணம் செய்துவிட்டாள். அப்போதில் இருந்து என் மகனுக்கு கேடு காலம் ஆரம்பித்து விட்டது என்று கத்தினார். என் மகனை கைது செய்யும் வரை அனைவரும் என்ன செய்தீர்கள் என்று கதறினார். உடனே காவேரி மற்றும் கங்கா இருவரும் சேர்ந்து போலீஸ் ஸ்டேஷனுக்கு கிளம்பினார்கள். அங்கு சென்று என்ன பேசினாலும் பசுபதிக்கு ஆதரவாகவே பேசினார். ராகவை வேண்டும் என்றே குமரன் அடுத்து துன்புறுத்தி உள்ளான் என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…