Mahanadhi Serial Today Episode | 02.06.2023 | Vijaytv

மகாநதி தொடரில் இன்று,பசுபதி பேசியதை நம்பி குமரன் மற்றும் சாரதா இருவரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தார்கள். அவர்களை பார்த்ததுமே பசுபதிக்கு நம் பிள்ளையை வெளியே கொண்டு வந்து விடலாம் என்று நம்பிக்கை வந்து விட்டது. பின் சாரதா உள்ளே வந்து ராகவை பார்த்தார். பின் போலீஸிடம் கொடுத்த புகாரை வாபஸ் வாங்கவும் கை எழுத்து போட்டார். பின் ராகவை வெளியே கொண்டு வந்தார். வீட்டுக்கு சாரதா மற்றும் குமரன் வந்ததும் அனைவரிடமும் புகாரை வாபஸ் வனகியதை கூறினார். அது கேட்ட காவேரி கோவத்தின் உச்சிக்கு சென்றார். யாரை கேட்டு உகாரை வாபஸ் வாங்கினார் என்று கத்தினார். இப்படி பயந்து பயந்து தான் ராகவ் போன்றவர்கள் அதிகமாக இருக்கிறார்கள், என்னவெனா செய்யலாம் என்ற மனநிலை வந்துவிட்டது என்று கத்தினார். மேலும் அம்மாவுக்கு தான் அறிவு இல்லை என்றால் உங்களுக்கும் அறிவு இல்லையா? இளுங்களுக்கு மூளை இல்லையா என்று குமரனை பார்த்து கேட்டார். உடனே கங்காவுக்கு கோவம் வந்தது. தன் புருஷனை எப்படி இப்படி மரியாதை இல்லாமல் பேசலாம் என்று கத்த ஆரம்பித்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author