மகாநதி தொடரில் இன்று, குமரன் வீட்டில் கங்கா முன்பே எதோ சின்ன பிள்ளைகள் போல் நடந்தது கொண்டார். அதற்கு கங்காவே எரிச்சல் அடைந்தார். ஆனால் காவேரி அவரை கிண்டல் செய்தால் மட்டும் அவரை முறைத்தாள். அதற்கு காவேரியும் கிண்டல் செய்வது போல் பேசினார். ஆனால் கங்கா குமரன் மீது இப்படி அன்பு வைத்து இருப்பதை பார்த்து சாரதா மகிழ்ச்சி அடைந்தார். யமுனாவை காவேரி அவரது காலேஜுக்கு கிளம்ப சொன்னார். ஆனால் யமுனா தன்னால் யாரையும் பார்க்க முடியாது. நான் வேலைக்கு செல்கிறேன். இனி நான் படிக்க மாட்டேன் என்று கூறினார். ஆனால் அதையும் காவேரி கண்டித்து நீ எந்த தப்பும் செய்யவில்லை, பின் எதற்காக மற்றவர்களை பார்த்து பயப்பட வேண்டும் என்று ஊக்கபடுத்தினார். என்ன நடந்தாலும் படிப்பை மட்டும் விடவே கூடாது என்று கூறினார் காவேரி. கங்காவும் இன்னும் இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்தாலும் பரவாயில்லை, ஆனால் படிப்பை விட கூடாது என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….