Mahanadhi Serial Today Episode | 12.06.2023 | Vijaytv

மகாநதி தொடரில் இன்று, காவேரி யமுனா காலேஜுக்கு வந்து அவரது நண்பர்கள், ராகவ் நண்பர்கள் மற்றும் யமுனாவை கிண்டல் செய்தவர்கள் தவறாக பேசியவர்கள் முன் யமுனா எந்த தவறும் செய்யவில்லை என்று காட்டினார். பின் அவர் காலேஜின் முதல்வரையும் பார்த்து பேசினார். பெற்றோர் வர வேண்டிய இடத்தில் காவேரி எதற்கு வந்தார் என்று கேள்வி கேட்டார்கள். ஆனால் காவேரி எனது அப்பா இறந்துவிட்டார் அதற்கு பின் அம்மா பெரிதாக வெளியில் செல்லவில்லை என்று கூறினார். மேலும் யமுனா எந்த தவரும் செய்யவில்லை என்று எடுத்து கூறினார். ராகவ் என் தங்கையை எப்படி ஏமாற்றினார், எதற்காக யமுனா அவனுடன் சென்றால் என்ற விவரம் அனைத்தையும் கூறினார். போலீஸ் ஸ்டேஷனில் எடுத்த வீடியோ, யமுனாவை எப்படி கண்டு பிடித்தோம் என்று அனைத்தையும் கூறினார். அந்த ஆதாரங்களை பார்த்த பின்பு தான் யமுனா எந்த தவறும் செய்யவில்லை என்று அவர்களுக்கு புரிந்தது. இனியாவது எதாவது பிரச்சனை இருந்தால் தீர விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு கூறினார் காவேரி. உடனே ராகவை அழைத்து பேசி கண்டித்தார்கள். இது போன்ற தவறுகள் இனி நடக்க கூடாது என்று கண்டித்து பேசினார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author