Mahanadhi Serial Today Episode | 15.06.2023 | Vijaytv

மகாநதி தொடரில் இன்று, குமரன் வந்த நபரை எதேதோ பொய் சொல்லி அவரை வெளியே அனுப்பிவிட்டார். அதனால் குதூகலமாக இருந்தார். வீட்டுக்கு திண்பண்டங்கள் வாங்கி வந்து இருந்தார். அதற்குள் காவேரி, வீட்டில் அனைவரிடமும் குமரன் தான் அவர்களை அனுப்பிவிட்டார் என்று கூறினார். இதனால் நமக்கு வர வேண்டிய இரண்டு நாள் வருமானம் போச்சு என்று புலம்பினார் சாரதா. காவேரி மற்றும் கங்கா இருவரும் சேர்ந்து எதற்காக இந்த வேலையை செய்ய வேண்டும் என்று விசாரித்தார்கள். அப்போது அவர் கங்கா மீது வைத்து இருக்கும் அன்பை வெளிப்படுத்தினார் தனக்கு கிடைத்த பொக்கிஷம் அவரை எக்காரணம் கொண்டும் விட்டு கொடுக்க முடியாது என்று கூறினார். இதன் கங்கா ரசிக்கவும் செய்தார். காவேரி மற்றும் குமரன் இருவரும் தேனிலவு திட்டம் பற்றி பேசினார்கள். இனி குடும்பமாக செல்லலாம் என்று திட்டம் போட்டார்கள். அதற்கு முதலில் நர்மதாவை முதலில் இதை சொல்லி ஆசை காட்டினார்கள். பின் கங்காவை சம்மதிக்க வைத்தார்கள். சாரதாவை கேட்க வேண்டும் என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author