Aaha Kalyanam Serial Today Episode | 21.06.2023 | Vijaytv

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, மஹா அறையில் இருந்து சூர்யா வந்ததை பார்த்து வீட்டில் அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். மேலும் ஒரு படி சென்று ராஜலக்ஷ்மி அந்த அறைக்குள் நேற்று இரவு என்ன நடந்தது என்று கேட்டார். அதுவும் மஹாலக்ஷ்மி இதை பற்றி கூறியே ஆக வேண்டும் என்று கூறினார். மஹா மற்றும் அவள் குடும்பத்துக்கே மானம் மரியாதை இல்லை, எந்த வெக்கம் கேட்ட வேலையும் செய்வாள் என்று ராஜலக்ஷ்மி கூறினார். அதி கேட்டதும் மஹா கோவத்தில் அவரை ராஜலக்ஷ்மி இரவு வெளியே பூட்டி வைத்து சென்ற விஷயத்தை கூறினார். அதை கேட்டதும் தாத்தா பாட்டி இருவரும் கோவத்தின் உச்சிக்கு சென்றார்கள். இப்படி வீட்டுக்கு வந்த மரும்களை கொடுமை செய்கிறீர்கள் என்று கத்தினார்கள். அதற்கு பின் பூட்டிய அறையை உங்கள் மகன் தான் திறந்து உள்ளே வந்தார் என்று கூறினார். விஜய் சூர்யா குடித்து இருந்ததையும் கூறினார். அவர் ஒரு நிலையில் இல்லை என்றும் கூறினார். பின் இரவு தன் அம்மா செய்த தவறுக்கும், தான் குடித்து விட்டு மஹா அறைக்குள் நுழைந்ததற்கும் சூர்யா மன்னிப்பு கேட்டார். பின் மஹாவிடம் சூர்யா தனியாக இரவு எதுவும் நடக்கவில்லையே என்று விசாரித்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author