மற்ற கேப்டன்களுக்கும் தோனிக்கும் உள்ள வித்தியாசம், தோனி வீரர்களை நம்புவார் – அஷ்வின்

Ashwin About Indian Team Captainship Idamporul

Ashwin About Indian Team Captainship Idamporul

ரவிச்சந்திரன் அஷ்வின் ஒரு பிரத்யேக பேட்டியில் மற்ற கேப்டன்களுக்கும், தோனிக்கும் உள்ள வித்தியாசத்தை கூறி இருக்கிறார்.

மற்ற கேப்டன்கள் ஒரு வீரர் ஒரு முறை பெர்பார்ம் பண்ண தவறினால் அவருக்கு இரண்டு போட்டிகள் வாய்ப்பு கொடுத்து விட்டு மூன்றாவது போட்டியில் வெளியில் உட்கார வைத்து விடுவர். ஆனால் தோனி அப்படியில்லை அவர் வீரர்கள் மீது நம்பிக்கை வைப்பார். அந்த நம்பிக்கை வீரர்களை சிறப்பாக விளையாட தூண்டும். அது தான் அவரின் கேப்டன்சிப் மந்திரமும் கூட.

ஒரு வீரரின் மீது நம்பிக்கை வைத்து ஒரு முழு சீரிஸ்சும் ஆட வைப்பார் தோனி, அது அந்த வீரர்களுக்கே ஒரு வித தன்னம்பிக்கை கொடுக்கும். நம் மீது நம்பிக்கை வைத்து ஆட வைத்து இருக்கும் கேப்டனுக்கு ஏதாவது ஆடுகளத்தில் செய்ய வேண்டும் என தூண்டும். ஒரு வீரர் தன்னுடைய பார்மை முழுவதும் இழந்து இருந்தாலும் கூட தோனி கேப்டன்சிப்பில் அந்த வீரர் தன்னுடைய 200 பெர்சண்ட் திறமையை காட்டுவார்.

“ அதற்கு தற்போது நடந்த ஐபிஎல் பைனலில் ஜடேஜா மற்றும் ராயுடு விளையாடிய விதமே சாட்சி என அஷ்வின் கூறி இருக்கிறார் “

About Author