சினிமாவிற்கு முழுவதுமாம முழுக்கு போட்டு விட்டு சமந்தா முழுக்க முழுக்க ஆன்மீகத்தில் களம் இறங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழ், தெலுங்கு என எல்லா மொழி சினிமாவிலும் பாப்புலராக இருப்பவர் நடிகை சமந்தா. சில நாட்களாக மயோசிடிஸ் நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் தற்போது தான் குணமாகி வருகிறார். இந்த நிலையில் வரும் சினிமா வாய்ப்புகளை எல்லாம் தற்போது ஏற்பதில்லையாம். மன அமைதிக்காக ஆன்மீகம் தேடி செல்ல இருப்பதாக சமந்தா தரப்பில் சொல்லப்படுகிறது.
“ இந்த ஆன்மீக வாழ்க்கை நிரந்தரமா இல்லை சில மாதங்கள் மட்டுமா என்பதை சமந்தா தான் முடிவு செய்ய வேண்டும் என்கின்றனர் சமந்தா தரப்பினர் “