ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, சூர்யா மற்றும் மஹா இருவரும் ஒரு அறையில் படுக்க சம்மதித்து உள்ளே சென்றார்கள். ஆனால் இந்த புரோகிதர் சொன்னது எல்லாமே கட்டுக்கதை. தாத்தா பாட்டி இருவரும் சேர்ந்தே இப்படி ஒரு நாடகத்தை நடத்தி இருக்கிறார்கள். இப்படி செய்தால் தான் சூர்யா அறையில் மஹா நிரந்தரமாக தங்க வைக்க முடியும் என்பது அவர்களது எண்ணம். அன்று இரவு சூர்யா கட்டிலிலும் மஹா தரியிலும் படுத்தார்கள். ஆனால் சூர்யாவின் குறட்டை சத்தம் கேட்டு மஹா தூக்கம் இல்லாமல் இருந்தார். மேலும் தூக்கத்தில் சூர்யா உருண்டு கீழே விழுந்து விட்டார். அதுவும் மஹா மீது விழுந்து விட்டார். இதனால் மஹா கத்தி அதை பெரிய அளவிலான பிரச்சனை போல் சித்தரித்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….