மகாநதி சீரியலில் இன்று சறுக்கு மரம் ஏறும் போட்டியில் விஜயின் பெயரை காவிரி சொல்கிறார். விஜய்க்கோ சறுக்கு மரத்தை பார்த்து பயம் வந்துவிட அவர் காரணங்கள் கூறி விலகுகிறார். அப்பொழுது ஊர் மக்கள் விஜய் பயந்து விட்டதாகவும் அதற்கு பதிலாக காவேரி சறுக்கு மரம் ஏறுவார் எனவும் கூறுகிறார்கள். விஜய் காவேரியை பார்த்து கிண்டல் செய்ய காவேறியோ ஐந்து நிமிடம் தருமாறு கேட்கிறார். பின்னர் கடகடவென காவேரி மரத்தை ஏறியதை பார்த்து விஜய் அதிகரித்து போகிறார்.
பின்னர், இருவரும் ரிசார்ட் இருக்கு வந்துவிட்டு இரவில் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்பொழுது விஜய் குடித்துக் கொண்டிருக்கிறார். காவேரி தனது தந்தையை பற்றி பேசிவிட்டு பின்னர் நெகிழ்ச்சியாகி அழுகிறார். அதன்பின் காவேரி தனக்கு குளிர்கிறது எனக் கூற, விஜய் அவருக்கு ஒயின் கொடுக்கிறார். விஜய்யும் காவேரியும் சேர்ந்து குடித்துக் கொண்டே சிரித்து பொழுது கழிப்பதோடு எபிசோட் முடிவடைகிறது.