ரசிகர்களின் 17 வருட கோப்பை தாகத்தை தணித்த ஸ்மிருதி தலைமையிலான பெங்களுரு அணி!

WPL Final RCB VS DC RCB Won The Trophy Idamporul

WPL Final RCB VS DC RCB Won The Trophy Idamporul

பெங்களுரு ரசிகர்களின் 17 வருட கோப்பை தாகத்தை தணித்து இருக்கின்றனர் ஸ்மிருதி தலைமையிலான மகளிர் பெங்களுரு அணி.

16 சீசன் பெரிய பெரிய நட்சத்திர வீரர்களை அணியில் வைத்து இருந்தும் கூட ஆடவர் பெங்களுரு அணியால் ஐபிஎல்-லில் ஒரு கோப்பை கூட கைப்பற்ற முடியவில்லை. இருந்தாலும் கூட பெங்களுரு அணி எப்போது எங்கு விளையாடினாலும் ‘RCB RCB RCB’ என்ற சத்தம் செவியை பிளக்கும். பல விசுவாசமான ரசிகர்களை கொண்ட ஒரு அணி என்றால் RCB யை சொல்லலாம். ஆனாலும் கூட ரசிகர்களுக்கு அந்த கப்பின் தாகம் என்பது இருந்து கொண்டே தான் இருந்தது.

இந்த நிலையில் நேற்று மகளிர் ப்ரீமியர் லீக் இறுதிப் போட்டியில் டெல்லியை எதிர்கொண்டது பெங்களுரு அணி. முதலில் ஆடிய டெல்லி அணி பெங்களுரு அணியின் ஸ்பின் காம்போவை தாக்கு பிடிக்க முடியாமல் 113 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. அதற்கு பின்னர் ஆடிய பெங்களு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி, பெங்களுரு அணிக்கான முதல் கோப்பையை கைப்பற்றியது. 16 சீசன்களாக ஆடவர் பெங்களுரு அணி செய்யாத ஒரு சாதனையை, ஸ்மிருதி தலைமையிலான பெங்களுரு அணி, இரண்டே சீசனில் செய்து சாதனை புரிந்து இருக்கிறது.

“ போன வருடம் புள்ளிப்பட்டியலில் எங்கோ இருந்த பெங்களுரு மகளிர் அணி, இந்த வருடம் தங்களது கடின முயற்சியால் படிப்படியாக இறுதிப்போட்டியை அடைந்து கோப்பையையும் கைப்பற்றி இருக்கிறது “

About Author