சிஎஸ்கே அணியின் கேப்டன் ஆகும் இளம் வீரர்? அப்படி என்றால் தோனிக்கு என்ன ரோல்?

Ruturaj Gaikwad Is A New Captain Of CSK Fact Here Idamporul

Ruturaj Gaikwad Is A New Captain Of CSK Fact Here Idamporul

இந்த வருடம் சிஎஸ்கே அணியின் கேப்டனாக அணியின் இளம் வீரர் ஒருவர் செயல்பட இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி வருகிறது. அதன் உண்மைதன்மை குறித்து பார்க்கலாம்.

சமீபத்தில் ஐபிஎல் அதிகாரப்பூர்வ பக்கம், அணிகளின் கேப்டன்கள் அனைவரும் ஐபிஎல் 2024 கோப்பையுடன் நிற்கும் ஒரு படம் ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக எம் எஸ் தோனி தான் இருப்பார் என அனைவரும் எதிர்பார்த்து காத்து இருந்த நிலையில் ருதுராஜ் இருந்தது சிஎஸ்கே ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இருந்தது.

Ruturaj Gaikwad Is A New Captain Of CSK Fact Here Idamporul
Ruturaj Gaikwad Is A New Captain Of CSK Fact Here Idamporul


சரி, ஒரு வேளை தோனி ஓய்வு பெற்று விட்டால், ஒரு இளம் வீரர் அணியை தலைமை ஏற்பது அவசியம் ஆகிறது. அதுவும் தோனி இருக்கும் போதே கேப்டன் ஆக ருதுராஜ் நியமிக்கபடின் தோனியிடம் இருந்து அவர் நிறைய கற்றுக் கொள்ளவும் வாய்ப்புகள் இருக்கும். சரி அப்படியென்றால் தோனிக்கு என்ன ரோல் ஆக இருக்கும் என்று யோசித்தால் பழைய ஹேர் ஸ்டைல், பழைய பாணி, பழைய அதிரடி, பழைய ஹெலிகாப்டர் ஷாட் என எல்லாவற்றையும் மீண்டும் தோனியின் புதிய ரோலில் பார்க்கலாம் என்று தோன்றுகிறது.

”ஒரு சிலர் இதை நல்ல முடிவென வரவேற்கின்றனர். இன்னும் சிலர் தோனியே கேப்டனாக செயல்பட வேண்டும் என நினைக்கின்றனர். இன்னும் சிலர் ஒரு போட்டியாவது தோனியை கேப்டனாக பார்க்க வேண்டும் என பதிவிடுகின்றனர். என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “

About Author