சக்தியை விரைவில் பிரிகிறேன் – உடுமலை கவுசல்யா

Udumalai Gousalya marriage breakup

சமூக ஆர்வலர் என்ற பிம்பத்தில் வலம் வரும் கவுசல்யா கடந்த 2015 ஆம் ஆண்டு மாற்று சாதிப்பிரிவை சேர்ந்த சங்கர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் மூன்று பேர் சேர்ந்த கும்பல் உடுமலை பேருந்து நிலையத்தில் சங்கரையும் கவுசல்யாவையும் சரமாரியாக வெட்டித்தீர்த்தது. இதில் சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த அனுதாபத்தில் பல சமூக ஆர்வலர்களின் அபிமானம் கிடைக்கவே,கவுசல்யாவும் தன்னை ஒரு சமூக செயற்பாட்டாளராக மாற்றிக்கொண்டு அவர்களுடன் இணைந்தார். சங்கர் இறந்த ஒரிரு வருடத்திற்குள்ளேயே கவுசல்யாவிற்கு மற்றுமொரு சமூக ஆர்வலர் என்னும் பிம்பம் கொண்ட சக்தியின் மேல் காதல் ஏற்பட்டது. பலரும் சக்தியை பற்றி அவதூறாக கவுசல்யாவிடம் கிசுகிசுத்த போதும் பெரியாரிய கழகத்தின் முன்னிலையில் கவுசல்யாவும் சக்தியும் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் அவர் வெளியிட்டிருக்கும் பேஸ்புக் பதிவு ஒன்றில் (தற்போது டெலிட் செய்யப்பட்டிருக்கிறது) சக்தியும் நானும் பிரிகிறோம். ஓராண்டாக சக்தி என்னை மனதளவில் மிகவும் காயப்படுத்தி விட்டார் இனி அவரோடு வாழ இயலாது என்றும் வருகின்ற திங்கள் விவாகரத்துக்கு முறையாக விண்ணப்பிக்க இருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

“ காதலித்தவன் கொலை செய்யப்பட்டு பிணமான ஒரிரு ஆண்டுகளில் இன்னொரு காதல் இன்னொரு திருமணம் தற்போது அதுவும் விவாகரத்து நிலையில், பல முறை உற்றவர்களும் நண்பர்களும் சக்தியைப் பற்றி கூறிய போதும் தேடி போய் விழுந்த கவுசிக்கு தேவை தான் என்கிறார்கள் கவுசிக்கு நெருங்கியவர்கள் “

About Author