கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 31,957 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In India 23 09 2021

Corono Updates In India 23 09 2021

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 31,957 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய நிலவரத்தை விட இன்று சற்றே அதிகம். மேலும் நேற்று ஒரு நாளில் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 279 ஆக உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் ஒட்டு மொத்த கொரோனோ பலி 4,46,080 ஆக உயர்ந்துள்ளது.

இது போக நேற்று ஒரே நாளில் தொற்றிலிருந்து 31,968 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். நேற்றைய நிலவரப்படி தொற்றின் விகிதம் அதிகரித்திருந்தாலும் கூட மீட்பு விகிதம் இந்தியாவில் எப்போதும் போல தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. தடுப்பூசி உபயோகமும் இந்தியாவில் 83 கோடியை நெருங்கி உள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 24 மணிநேரத்தில் 1,682 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் 21 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி தமிழகத்தில் 35,400 ஆக உயர்ந்துள்ளது. தடுப்பூசி உபயோகமும் தமிழகத்தில் 4.33 கோடியைக் கடந்திருக்கிறது.

“ தேசம் முழுக்க சிறப்பான கொரோனோ நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மாநில அரசுகளுக்கும், மருத்துவத்தை மாநிலத்திற்குள் திறம்பட மக்களுக்கு கொடுத்து வரும் மருத்துவர்களுக்கும் இச்சமயத்தில் மனம் கனிந்த நன்றியை தெரிவித்தே ஆக வேண்டும்
நன்றிகள் “

About Author