மஹாராஷ்டிரா | 15 வயது சிறுமி, 33 பேர்களால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட அவலம்!
Maharastra 33 Mens Raped A 15 Years Girl Child
மஹாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் 15 வயது சிறுமி ஒருவர், கிட்ட தட்ட 33 பேர்களால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டது அந்த சிறுமியாலே வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சிறுமி கொடுத்த புகாரின் பேரில், அதில் சம்மந்தப்பட்ட 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக டொம்பிவிலி காவல்நிலையத்தினர் தெரிவித்துள்ளனர்.
முதலில் அந்த சிறுமிக்கு பழக்கமான நண்பன் ஒருவன், அந்த சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி விடியோ எடுத்ததாக தெரிய வருகிறது. பிறகு அவன் அந்த விடியோவை வைத்து தொடர்ந்து அந்த சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளான். அந்த விடியோவை அவனுடைய நண்பர்களுக்கும் அனுப்பி அவனின் நண்பர்களின் இச்சைக்கும் அந்த சிறுமியை மிரட்டி இணங்க செய்துள்ளான்.
இது போல 33க்கும் மேற்பட்ட 16-23 வயது ஆண்கள், அச்சிறுமியை கடந்த 9 மாதங்களாக அவர்களில் இச்சைக்கு அந்த சிறுமியை மிரட்டி மிரட்டி இணங்க செய்துள்ளனர். கடைசியாக அச்சிறுமியின் உறவினர்கள், ஒரு சமூக ஆர்வலரின் உதவியை நாடி அந்த சிறுமியை மிரட்டிய ஒருவனின் செல்போன் எண்ணை கண்டறிந்து அந்த சிறுமியின் வாயிலாகவே அவனை தொடர்பு கொண்டு, பொது இடத்திற்கு வரச்சொல்லி சினிமா பாணியில் காவல் துறையினரின் உதவியுடன் பிடித்துள்ளனர். இதுவரை 28 பேர் பிடிபட்டிருப்பதாகவும் மீதமுள்ளவர்கள் விரைவில் சிக்குவர் என்றும் டொம்பிவிலி காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
“ 15 வயது சிறுமியை மிரட்டி அவர்களின் இச்சைக்கு உட்படுத்திய இந்த 33 பேரை இந்த சட்டம் என்ன செய்யும்? மிஞ்சி போனால் மரண தண்டனை கொடுத்து விடுமா? அதனால் இந்த வன்புணர்வுகள் நின்று தான் விடுமா? தொடர்ந்து ஆங்காங்கே அரங்கேறும் இந்த வன்புணர்வுகளுக்கு இந்திய சட்டம் என்ன தான் தீர்வு கொண்டு வரப்போகிறது? என்ற கேள்விகளின் கனத்த குரல் தான் இன்று தேசம் முழுக்க உள்ள பெண்களால் எழுப்பப்பட்டு வருகிறது. “
About Author
Auto Amazon Links: No products found.