ஐபிஎல் 2021 | மும்பையை வென்றது பெங்களுரு அணி!

RCB Win Against MI In 39 th Match Of IPL 2021

RCB Win Against MI In 39 th Match Of IPL 2021

ஐபிஎல் 2021-இன் 39 ஆவது போட்டியில் மும்பை அணியை வென்று தனது தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது பெங்களுரு அணி.

முதலில் ஆடிய பெங்களுரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 165 ரன்கள் எடுத்தனர். அதிகபட்சமாக கோலி 51(42) ரன்களும், மேக்ஸ்வெல் 56(37) ரன்களும் எடுத்திருந்தனர். அதற்கு பின் ஆடிய மும்பை அணியில் ரோஹிட் சர்மாவை 43(28) தவிர யாரும் பெரிதாய் ஜொலிக்காததால் 18.1 ஒவர்களில் 111 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.

பெங்களுரு அணி சார்பில் சஹால் மூன்று விக்கெட்டுக்களையும், ஹர்சல் பட்டேல் ஹாட்ரிக் விக்கெட்டுக்களைச் சேர்த்து நான்கு விக்கெட்டுக்களையும் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.

” இரண்டு அணிகளுமே தொடர்ச்சியாக இரண்டு தோல்விகளை அடைந்திருந்த நிலையில், பெங்களுரு அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று தன் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது “

About Author