கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 21,901 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In India 29 09 2021

Corono Updates In India 29 09 2021

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 21,901 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் கொரோனோ தொற்றுக்கு இந்தியாவில் 375 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி இந்தியாவில் 4,47,781 ஆக உயர்ந்து இருக்கிறது.

இது போக நேற்று ஒரே நாளில் 29,900 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தடுப்பூசி உபயோகத்தை பொறுத்தவரை இந்தியாவில் அது 87 கோடியைக் கடந்து இருக்கிறது. இந்தியாவில் 100 பேருக்கு தலா 65.17 பேர் தடுப்பூசி எடுத்துக் கொள்கின்றனர். இந்த ஆர்வத்திலிருந்து, மக்கள் தடுப்பூசியின் பயனை உணர்ந்து விட்டது தெரியவருகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை நேற்று ஒரு நாளில் 1,630 பேருக்கு புதியதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்றைய தினத்தில் மட்டும் தமிழகத்தில் 17 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை தமிழகத்தில் 35,526 ஆக உயர்ந்துள்ளது.

“ பாதிப்பின் விகிதம் குறைந்தாலும், அதிகரித்தாலும் அதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் தன்னலம் கருதியாவது, தொடர்ந்து முகக்கவசம் அணிந்திடுங்கள், உங்கள் வீட்டின் அருகே அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி முகாம்களுக்கு சென்று நீங்களாகவே தடுப்பூசி எடுத்துக் கொள்ளுங்கள் “

About Author