தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதியை சொக்கலிங்கம் நம்பாததால் சரஸ்வதியின் பாட்டி தன் பேத்தியின் வாழ்க்கையை காப்பாத்த தமிழிடம் உதவி கேட்கிறார். அவரும் தன்னால் முடிந்ததை செய்து இந்த திருமணத்தை நிறுத்த முயற்சிக்கிறேன் என கூறுகிறார். கோதை தன் மகன் கார்த்திக் திருமணத்தில் ஏதோ ஒரு நெருடல் இருப்பதாக நினைக்கிறார். பின் அதை தன் கணவரிடம் கூறி தனக்கு சந்திரகலாவின் நடவடிக்கைகள் பிடிக்கவில்லை எனவும் கூறுகிறார். ஷ்யாம் வீட்டிற்கு நமச்சி தண்ணி அடித்துவிட்டு பிரச்சனை செய்கிறார். தன் நண்பனுக்கு உதவி செய்ய வேண்டும் என்று எண்ணி ஏதோ செய்கிறார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க..