கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 19,870 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In India 09 10 2021

Corono Updates In India 09 10 2021

தேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 19,870 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் நேற்றைய தினத்தில் மட்டும் 248 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கையானது தேசத்தில் 4,50,408 ஆக உயர்ந்து இருக்கிறது.

இது போக இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 23,066 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மீட்பு விகிதம் இந்தியாவில் வெகுவா உயர்ந்து கொண்டே வருகிறது. மேலும் தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 93 கோடியை எட்டியிருக்கிறது. இந்தியாவில் 100 பேருக்கு தலா 70 பேர் தடுப்பூசி எடுத்துக் கொள்கின்றனர். ஆரம்ப காலக்கட்டத்தில் இந்த எண்ணிக்கை 50-ற்கும் கீழாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

” மூன்றாவது அலை குறித்து தொடர்ந்து பல்வேறு தகவல்கள் வந்து கொண்டு இருக்கின்றன. நாம் தளர்வுகளுடன் இருக்கும் இந்த நிலையில், நாம் மட்டுமே பரவலுக்கான கருப்பொருள், என்பதை புரிந்து கொண்டு நமக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நாமே முறையாக கையாள வேண்டும். அவ்வாறாக இருந்தால் மட்டுமே இந்த மூன்றாவது அலையை நாம் இலகுவாக எதிர் கொள்ள முடியும் “

About Author