தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று,சந்திரகலா வீட்டில் கல்யாண சடங்குகள் சம்பிரதாயங்கள் பற்றி பேசிக்கொண்டு இருந்தார்கள். கோதை, சந்திரகலாவின் திருமண வாழ்க்கை பற்றி தெரிந்துகொள்ள நினைத்தார். தாலி உருக்கும் சடங்கிற்கு சுமங்கலிகள் வர வேண்டும் என்றும் கூறினார். இதை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த சந்திரகலா கோபம் அடைந்தார். ஆனால் அதை வெளிகாட்டிகொள்ளாமல் தன் கணவர் மைசூர் பக்கம் இருப்பதாக தகவல் தெரிந்தது என கூறினார். பின் தாலி உருக்கும் சடங்கிற்கு ஆசாரியிடம் கலந்து பேசி நேரமும் முடிவு செய்தனர். ஆனால் சந்திரகலா கோதையிடம் தவறான ஒரு நேரத்தை கூறிவிட்டார். அதையும் கேட்டு கோதை கிளம்பிவிட்டார். தமிழ் அவரின் காதலை சரஸ்வதியிடம் கூறுமாறு நமச்சி சொல்ல. அங்கு சரஸ்வதியை காதலை சொல்லுமாறு மின்னல் சொல்ல. இருவரும் பின் காதலை பரிமாறினார்களா? காணொளியை பார்க்க….