இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,936 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In India 20 10 2021

Corono Updates In India 20 10 2021

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 14,936 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் தேசத்தில் 199 பேர் கொரோனோ தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலியானது 4,52,684ஆக உயர்ந்து இருக்கிறது.

இது போக இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 19,451 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தடுப்பூசி உபயோகமும் இந்தியாவில் 100 கோடியை எட்ட இருக்கிறது. தேசத்தில் 100 பேருக்கு 73.7 பேர், என தடுப்பூசி உபயோகம் வெகுவாக உயர்ந்திருக்கிறது. இன்னும் ஒரிரு நாளுக்குள் 100 கோடி என்ற இலக்கை தடுப்பூசி உபயோகம் அடைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“ கொரோனோ தடுப்பு நடவடிக்கைகளிலும் சரி, தடுப்பூசி செயல்பாடுகளிலும் சரி வளர்ந்த நாடுகளை விட, நம் தேசம் சிறப்பாக செயல்படுவதாக உலக சுகாதார அமைப்புகளே இந்தியாவை வெகுவாக பாராட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது “

About Author