Mouna Ragam 2 Serial Today Episode | 22.10.2021 | Vijaytv

mounaragam2.22.10.21

mounaragam2.22.10.21

மௌன ராகம் தொடரில் இன்று, சத்யாவிடம் சுகுமார் அங்கு மல்லிகாவிற்கு கார்த்திக் சமைத்து கொடுத்து மகிழ்ந்ததை கூறினார். அதை கேட்டதில் இருந்து மிகுந்த மகிழ்ச்சியில் துள்ளிகுதித்தார். வருனின் கையை பிடித்து காதலுடன் பார்த்தார். பின் கொடைக்கானல் கிளம்பினர். கார்த்திக்கின் அம்மா கார்த்திக்கை அழைத்து ஸ்ருதி கொடைக்கானல் வருவதை கூறி எச்சரித்தார். எதற்கும் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறினார். பின் ஸ்ருதிக்கு அழைத்து இங்கு இருப்பதாக விசாரித்தார். பின் எதாவது தேவைப்பட்டால் அழைக்குமாரு கூறினார். காதம்பரி தான் அழைத்தால் தொலைபேசியை எடுத்து பேசவில்லை எனவும், நீங்கள் அழைத்தால் மட்டும் எடுத்து பேசுகிறார் என சந்தேகம் கொண்டார் காதம்பரி. சத்யா தன் தூக்கத்தில் தனது அம்மா அப்பா மூவரும் ஒன்றாக சாப்பிடுவது போல் கனவு கண்டார். வாழ்நாள் முழுவதும் அப்படி ஒன்றாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அடுத்து என்ன நடந்தது. காணொளியை பார்க்க….

About Author