கொரோனோ நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் 14,641 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In India 25 10 2021

Corono Updates In India 25 10 2021

கடந்த 24 மணி நேரத்தில் 14,641 பேருக்கு இந்தியாவில் புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் இந்தியாவில் 442 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலியானது தேசத்தில் 4,54,743 ஆக உயர்ந்து இருக்கிறது.

இது போக நேற்றைய தினத்தில் மட்டும் இந்தியாவில் 18,699 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 101 கோடியை எட்டி இருக்கிறது. இந்தியாவில் கிட்ட தட்ட 100 பேருக்கு தலா 76.04 பேர் தானாக முன் வந்து தடுப்பூசி எடுத்துக் கொள்வது குறிப்பிடத்தக்கது.

“ சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருக்கும் கொரோனோ பாதிப்புகள் மீண்டும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றன. இந்தியாவில் கிட்ட தட்ட எல்லா தளர்வுகளும் கொண்டு வரப்பட்டாகிற்று. சமூகமாகிய நாம் தான் நமக்கிடையே ஒரு சில கட்டுப்பாடுகளை வகுத்துக் கொண்டு மீண்டும் ஒரு பரவலை தடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் “

About Author