Tamizhum Saraswathiyum Today Episode | 25.10.2021 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை செய்தது தவறாக பட்டதை கார்த்திக் சுட்டிக்காட்டினார். அதை கோதையும் புரிந்து கொண்டு தான் சந்திரகலாவிடம் மன்னிப்பை கூறுகிறேன் என்று அவரது வீட்டிற்க்கு கிளம்பினார். அங்கு காலாவும் இருப்பதை பார்த்து குழப்பம் அடைந்தனர். பின் சந்திர கலாவிடம் மேடையில் நீங்க சங்கடப்பட்டதாக கார்த்திக் கூறினான் அதனால் தான் வீட்டிற்கே வந்து வருத்தம் தெரிவிப்பதாக கூறினார். பின் திருமண ஏற்பாடுகள் பற்றி பேசிக்கொண்டனர். அங்கு விழாவை எடுத்து நடத்த ஒரு காண்ட்ராக்ட் போல பேசுவதற்கு ஒருவர் வந்து இருந்தார். பின் கோதையும் அப்படியே செய்யலாம் என முடிவு எடுத்தார். ஆனால் சாப்பாடு மட்டும் பாரம்பரியமாக வாழை இலையில் வைத்து தான் விருந்து தரவேண்டும் என்றும் கூறினார். பின் அதன் படியே செய்வதாக வந்தவர் கூறினார். பின் திருமணத்திற்கு கூரை புடவை எடுக்க குடும்பமாக செல்ல சந்திரகாலாவை அழைத்தார் கோதை. அவர் வேண்டாம் என்று முதலில் கூறினாலும் பின் வருவதற்கு சம்மதித்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க..

About Author