Mouna Ragam 2 Today Episode | 26.10.2021 | Vijaytv

மௌன ராகம் தொடரில் இன்று, ஹோட்டல் அறையில் இருந்த புத்தகத்தை பார்த்து தாங்கள் கொடைக்கானல் தான் வந்து இருப்பதாக தெரிந்துகொண்டார் சத்யா. வருண் குளித்து வந்ததும் கொடைக்கானல் தானே வந்துள்ளோம், நான் இந்த புத்தகத்தில் பார்த்துவிட்டதாக கூறினார். பின் வருண் தாங்கள் பாத்திரமாக வந்து சேர்ந்ததை கூறினார். சத்யா தங்கும் இடத்தை கண்டுபிடித்ததை கூறினார். தருண் காலையில் ஜாகிங் செல்வது வழக்கம். இதை தெரிந்துகொண்ட ஸ்ருதி அவரை பார்பதற்கு ஜாகிங் செல்வது போல் வெளியில் ருக்மணியுடன் வந்தார். தருண் அவரை பார்த்ததும் ஆச்சரியப்பட்டார். வருண் தருண் சத்யா மூவரும் ஹோட்டலில் சாப்பாடு சப்பிட்டுகொண்டு பேசி சிரித்து மகிலந்தனர். இதை பார்த்த ஸ்ருதி சத்யாவை பார்த்தாலே தனக்கு பிடிக்கவே இல்லை என்று கூறினார். ருக்மணியும் சதயாவிற்கு வாழ்வு, அதிர்ஷ்டம் அதனால் இவளோ பெரிய வீட்டில் வாக்கபட்டு வந்திருப்பதாக கூறினார்.

About Author