ராஜா ராணி தொடரில் இன்று, சிவகாமி கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுகிறார். அப்போது அங்கு அர்ச்சனாவின் அம்மா மற்றும் தங்கை வந்தனர். இருவரும் சிவகாமியிடம் பேசினார்கள். பின் அர்ச்சனாவின் அம்மாவை நலம் விசாரித்தார் சிவகாமி. அதற்கு அவர் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லையே என்று கூற, பிரியா அம்மா நலமாக உள்ளார் என்று கூறி சமாளித்தார். பின் சிவகாமி கிளம்பிய பின் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது உனக்கு உடம்பு சரியில்லை என்று கூறி தான் அக்கா வந்ததாக கூறினார். சந்தியா சிவகாமியின் சம்மதத்தை வாங்க மயில், சக்கரை,ரவி அனைவரும் சேர்ந்து ஒரு திட்டம் போட்டிருந்தனர். அதற்காக சப்பாத்தியும் செய்தனர். ஆனால் அது என்ன திட்டம் என்று கூறவில்லை. சரவணன் வீட்டிற்குள் நுழைய முயற்சித்தார். ஆனால் அவரை வீட்டிற்குள் வர விடவில்லை. சற்று நேரத்தில் சிவகாமியும் வந்து கதவை தட்ட ஆரம்பித்து விட்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….