தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை சாப்பிடும் இடத்தில் VIP என பிரிவினை ஏற்படுத்தியதை ஏற்றுகொள்ள முடியவில்லை. ஆனால் நடேசன் மண்டபத்தில் பிரச்சனை செய்ய வேண்டாம் என்று கூறியதால் கோதை வேறு வழியின்றி அதற்கு ஒத்துக்கொண்டார். சரஸ்வதி அவரது வீட்டில் இருந்து கிளம்பினார். அப்போது சொக்கலிங்கம் மற்றும் வாசுகி இருவரும் வேறு ஒரு திருமணத்திற்கு கிளம்பினர். சரஸ்வதி கிளம்புவதை பார்த்ததும் அருணையும் கூட அனுப்புவதாக கூறினார். பின் ஒரு டாக்ஸி வரவைத்து அதைல் மூவரும் கிளம்பினார்கள். மண்டபத்திற்கு அருணும் வருவதை தமிழுக்கு குறுஞ்செய்தி அனுப்பினார் சரஸ்வதி. திடீர் என்று தானும் மண்டபம் உள்ளே வருவதாக கூறினார் அருண். இதனால் தமிழ் மணமகள் மற்றும் மணமகன் பெயர்களை மறைத்து வைத்தார். சரஸ்வதி வந்ததும் கோதை நடேசன் இருவருமே மிகவும் சந்தோஷம் அடைந்தனர். அருண் இருப்பதால் தமிழும் சரஸ்வதியும் ஒளிந்து ஒளிந்து பார்த்து பேசிக்கொண்டனர். அடுத்து என்ன நடந்து? காணொளியை பார்க்க…