ராஸ்ட்ரபதி பவனில் நடக்கும் பத்ம விருது விழாவில் சாலமன் பாப்பையாவும், தமிழக கூடைப்பந்து வீராங்கனை அனிதாவும் பத்ம ஸ்ரீ விருதைப் பெற்றனர்.
ராஸ்ட்ரபதி பவனில் நடக்கும் பத்ம விருது விழாவில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், இலக்கியம் மற்றும் கல்வித்துறை பிரிவில் சாலமன் பாப்பையாவிற்கும், விளையாட்டு துறை பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கூடைப்பந்து வீராங்கனை பி. அனிதாவிற்கும் பத்ம ஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தார்.
” இந்த வருடம் 7 பத்ம விபூசன் விருதுகளும், 10 பத்ம பூசன் விருதுகளும், 102 பத்ம ஸ்ரீ விருதுகளும், பத்ம விருதுகளின் கீழ் வழங்கப் பட இருக்கின்றன “