காற்றுக்கென்ன வேலி சீரியலில் இன்று மாதவன் பரதனிடம் வெண்ணிலாவை தன் வீட்டில் தங்குமாறு கேட்க வரதன் வெண்ணிலா சொல்பேச்சு கேட்க போவதில்லை அவளை கண்டுகொள்ளாமல் விட்டு விடலாம் என கூறுகிறார்.
கல்லூரி செமஸ்டர் விடுமுறை ஆரம்பித்ததால் சூர்யாவும் வெண்ணிலாவும் பிரிவை எண்ணி வருத்தப் படுகிறார்கள். ஆனால் அதை காண்பித்துக் கொள்ளாமல் பொய் காரணங்கள் கூறுகிறார்கள். மாறன் நண்பர்கள் அனைவரையும் பிரிவதை எண்ணி மிகவும் வருத்தப்படுகிறார்.
வீட்டில் அபி எப்படியாவது மீனாட்சியிடம் சூர்யா வெண்ணிலாவுக்கு உதவி செய்ததை கூறிவிடலாம் என எண்ணுகிறார். ஆனால், அவர் கூறுவதற்கு முன்பே சூர்யா மற்றும் மகாதேவன் அங்கு வந்து விடுகிறார்கள். கடைசியாக வாசுகிக்கு தெரியாமல் சௌமியா வீட்டிற்கு தெரியாமல் தனது வீட்டை விற்று தன் மகனுக்கு வேலை வாங்க முயற்சி செய்கிறார்.