மௌன ராகம் தொடரில் இன்று, சத்யா கடவுளிடம் வெண்டுவதை பார்த்த வருண் மிகவும் வருந்தினார். சத்யா மீது எந்த தவறும் இல்லை என்று எண்ணினார். அவரிடம் பேச வேண்டும் என்று நினைத்தார். அப்போது ஷீலா அங்கு வந்து அவரை மீண்டும் மனம் மாறும்படி பேசினார். சத்யா பொய் சொல்லிவிட்டார், அன்பாக இருப்பது போல் நடிக்கிறாள் , பணம் தான் அவளுக்கு வேண்டும் என்று சொல்லி மீண்டும் வருண் கோவம் கொண்டு சத்யாவை வெறுக்க தொடங்கினார். மனோகர் நடக்க போகும் பாட்டு போட்டியில் என்ன என்ன நடக்க வேண்டும் என்று வருண் தருண் இருவரிடமும் விவரித்தார். ஆனால் சற்று நேரத்தில் அந்த நிகழ்ச்சியில் பாட வந்தவருக்கு விபத்து ஏற்பட்டதாக ஒரு அழைப்பு வந்தது. அதை கேட்டதும் வீட்டில் அனைவரும் பதரினார்கள். அவருக்கு சிகிச்சை நடப்பதாக கூறினார்கள். ஆனால் அவரால் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாது எனவும் கூறினார்கள். அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…