மஹாராஷ்டிராவில் 17 பேருக்கு ஒமிக்ரான் தொற்று, மும்பையில் இரண்டு நாட்களுக்கு 144 தடை உத்தரவு!

Due To Increase Of Omicron Cases 144 Imposed In Mumbai City

Due To Increase Of Omicron Cases 144 Imposed In Mumbai City

மஹாராஷ்டிராவில் 17 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், மும்பை மாநகரில் இரண்டு நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஓட்டு மொத்த ஒமிக்ரான் தொற்று இந்தியாவில் 27 ஆக இருக்கும் நிலையில், மஹாராஷ்டிராவில் மட்டும் தனித்து 17 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் பாதுகாப்பு கருதி மும்பை மாநகரில் இரண்டு நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.

“ 3 வயது குழந்தை உட்பட, 17 பேருக்கு மஹாராஷ்டிராவில் ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது தேசத்தை அதிர்ச்சி அடைய வைத்து இருக்கிறது. மேலும் இதில் இரண்டு தவணை தடுப்பூசி போட்டவர்களும் உள்ளடங்குவர் என்பது கூடுதல் தகவல் “

About Author