தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி வீட்டில் பாட்டியின் உண்ணாவிரதம் தொடர்ந்தது. சொக்கலிங்கம் இதற்காக என்னால் பொய் சொல்ல முடியாது என்று உறுதியாக இருந்தார். வாசுகி தன் மகள் எதாவது தவறான முடிவு எடுத்துவிடுவாளோ என்று பயம்கொண்டார். சொக்கலிங்கத்திடம் தன் பயத்தை கூறினார். ஆனால் அதற்கும் சொக்கலிங்கம் மனம் மாறவில்லை. சற்று நேரத்தில் பாட்டி முழித்து பார்த்தபோது சரஸ்வதி அருகில் இல்லை என்றதும் பதிரிப்போனார். பின் வீட்டில் உள்ள அனைவரையும் எழுப்பி சரஸ்வதியை காணவில்லை என கூறினார் பாட்டி. பின் அனைவரும் தேட ஆரம்பித்தார்கள். பின் சரஸ்வதி மாடியில் நின்றுகொண்டு இருந்ததை பார்த்து அருண் அழைத்து வந்தான். தமிழ் தான் சொன்ன பொய்யை நினைத்து வருந்தினார். சந்திரகலா முன் தன் அம்மாவிற்கு எதும் அவமானம் ஏற்பட்டுவிடுமோ என்று பயம்கொண்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…