கொரோனோ நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் 5,784 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corona Updates In India 14 12 2021

Corona Updates In India 14 12 2021

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,784 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 252 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கையானது 4,75,88 ஆக உயர்ந்து இருக்குறது.

இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 7,995 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 134 கோடி என்ற மைல்கல்லை எட்டி இருக்கிறது. ஒட்டு மொத்த மக்கள் தொகையில் 60 சதவிகிதத்திற்கும் மேலானோர் குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசியாவது எடுத்துக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“ 571 நாட்களுக்கு பிறகு தேசத்தில் குறைந்தபட்ச கொரோனோ தொற்று ஒரு பக்கம் பதிவாகி இருந்தாலும், இன்னொரு பக்கம் ஒமிக்ரான் நம் தேசத்தை மட்டுமில்லாது ஒட்டு மொத்த உலகையே பயமுறுத்தி வருகிறது “

About Author