அதிகரிக்கும் ஒமிக்ரான் தொற்று | மீண்டும் பிறப்பிக்கப்படுமா ஊரடங்கு?

Omicron Updates In India 15 12 2021

Omicron Updates In India 15 12 2021

இந்தியாவில் இன்று வரை 64 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படுமோ என்னும் அச்சம் மக்களிடையே எழுந்து இருக்கிறது.

மஹாராஷ்டிரா (28), ராஜஸ்தான் (17), கர்நாடகா (3), குஜராத் (4), கேரளா (1), ஆந்திரா (1), டெல்லி (6), சண்டிகர் (1), தெலுங்கானா (3) என்று இந்தியாவில் 64 பேருக்கு ஒமிக்ரான் தொற்று 6 மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களில் கண்டறியப்பட்டு இருக்கிறது. இதனால் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படுமோ என்னும் அச்சம் மக்களிடையே நிலவி வருகிறது.

“ வெகு தீவிரமாக பரவி வரும் ஒமிக்ரான் தொற்று இன்னும் எந்த அளவுக்கு தீவிரம் எடுக்கும் என்பது யாரும் அறியாத ஒன்றாய் இருப்பதால், என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு விடை தெரியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன “

About Author