Mouna Ragam 2 Today Episode | 17.12.2021 | Vijaytv

மௌன ராகம் தொடரில் இன்று, தருண் மற்றும் ஸ்ருதி இருவரும் அவர்களது பாட்டு ஆல்பத்திற்கு பாடி அதை வீடியோவும் எடுத்து அவர்களின் முதல் பாடலை முடித்தார்கள். பின் அதை கேட்டு தருண் ரொம்ப அருமையாக உள்ளது என்று கூறினார். பின் அதை வீட்டில் கார்த்திக்கிடம் போட்டு காமித்தார். அவரும் ரொம்ப அருமையாக உள்ளது என்று கூறி பாராட்டினார். வீட்டில் அனைவருக்கும் இனிப்பு செய்து கொடுத்தார் காதம்பரி. எதற்கு என்று கேட்டதற்கு, சுருதி தருண் திருமணம், இன்னும் 3 மாதங்களில் நடைபெறும் என நினைத்து சந்தோசத்தில் செய்ததாக கூறினார். இதை கேட்ட கார்த்திக் மற்றும் அவரது அம்மாவிற்கு வருத்தமாக இருந்தது, தருணுக்கு விருப்பம் இல்லை என்றால் எதற்கு வற்புறுத்த வேண்டும் என்று கூறினார்கள். வருண் சத்யா இருவரும் பழையபடி மீண்டும் பேச ஆரம்பித்தார்கள். ஷீலாவிடம் இருக்கும் கோபம் இன்னும் குறையாமல் இருந்தார் மனோகர்.அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author