பிற மாநிலங்களில் இருந்து விமானத்தில் வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் – தமிழக அரசு

பிற மாநிலங்களில் இருந்து விமானங்கள் மூலம் தமிழகம் வருவபவர்களுக்கு இ-பாஸ்சை கட்டாயப்படுத்தி இருக்கிறது தமிழக அரசு.

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கே கட்டுப்பாடுகள், நெறிமுறைகள என்று இருந்து வந்த நிலையில், ஒமிக்ரான் பரவல் பிற மாநில பயணிகள் வழியாக ஊடுருவதை தடுக்க, பிற மாநிலங்களில் இருந்து விமானங்கள் மூலம் தமிழகம் வருகின்ற பயணிகளுக்கும் இ-பாஸ்சை கட்டாயப் படுத்தி இருக்கிறது தமிழக அரசு.

“ இனி அருகில் இருக்கும் மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு விமானம் வழியாக வந்தாலும் கூட இ-பாஸ் கட்டாயம். ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வருவதாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக தமிழக அரசு அறிக்கை விடுத்து இருக்கிறது “

About Author