விழுப்புரத்தில் 5 வயது சிறுவன் பசிகொடுமையால் பலி!

5 Year Old Child Dead Due To Hunger Villupuram Tamilnadu

5 Year Old Child Dead Due To Hunger Villupuram Tamilnadu

விழிப்புரத்தில் 5 வயது சிறுவன் பசிக்கொடுமையால் தள்ளு வண்டியில் இறந்து கிடந்தது தமிழகத்தில் துயர அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

விழுப்புரத்தைச் சேர்ந்த சலவைத் தொழிலாளி சிவக்குமார் இவர் தள்ளுவண்டியில் இஸ்திரி செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது தள்ளு வண்டியில் 5 வயது சிறுவன் ஒருவன் மயக்க நிலையில் கிடந்ததாக கூறப்படுகிறது. சிறுவனை கைப்பற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாகவும், பரிசோதனையில் குடலில் 2 நாட்களாக உணவு, தண்ணீர் எதுவும் இல்லாதது போல இருப்பதால் பசிக்கொடுமையால் இறந்து இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

“ இன்னமும் பசியால் இறப்புகள் ஏற்படுகிறது என்றால் அதுவும் குழந்தைகளுக்கு இந்த மரணம் நேருமானால் அதற்கு முழுக்க முழுக்க நாமும் இந்த அரசுமே பொறுப்பேற்க வேண்டும் “

About Author