தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, வாசுகி ஜோசியர் சொன்னதை கொதையிடம் கூறினார். கோதையும் அதை கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். பின் சொக்கலிங்கம் நிச்சயத்தை தனியாக வைக்க வேண்டாம் திருமணத்திற்கு முன்பு வைத்துக்கொள்ளலாம் என கூறினார். கோதையும் அதற்கு ஒத்துக்கொண்டார். பின் இந்த கல்யாணத்தை பற்றி வீட்டில் அனைவரும் கோடி பேசினார்கள். மாப்பிள்ளை வீட்டையும் சரஸ்வதி வீட்டில் அனைவரும் பார்த்தால் மனசுக்கு திருப்தியாக இருக்கும் என கோதை நினைத்தார். அதனால் சொக்கலிங்கத்தை வீட்டுக்கு அழைத்தார். அவரும் வர சம்மதித்தார். அந்த நேரத்தில் சந்திரகலா அங்கு வந்தார். இந்த வீட்டில் என் பொண்ணுக்கு மரியாதை இல்லை. இந்த வீட்டில் தமிழுக்கு கொடுக்கும் மதிப்பு கார்த்திக்கு இல்லை என கூறினார். புதுசாக திருமணம் ஆன கார்த்திக் வசு இருவரும் தேனிலவு செல்ல ஏற்பாடு செய்ய எந்த முயற்சியும் நீங்கள் எடுக்கவில்லை என கோபம் கொண்டார் சந்திரகலா. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…