தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழிடம் வசு கார்த்திக் சரியாக பேசுவது கூட இல்லை என்று கூறினார். என்னை மகாபலிபுரம் விஷயம் பற்றி பேச வேண்டாம் என்று சொல்லி நீங்களே கார்த்திக் இடம் சொல்லிவிட்டீர்கள் என்று கூறினார். அதேக்கு தமிழ் தானும் இதை பற்றி கார்த்திக் இடம் கூறவில்லை என்று கூறினார். ஆனால் இனி கார்த்திக் இடம் பேசி இந்த பிரச்சனையை சரி செய்வேன் என்று கூறினார். எதற்கும் வருத்தப்பட வேண்டாம், நான் அவனிடம் பேசி புரியவைக்கிரேன் என்றார் தமிழ்.பின் கார்த்திக் இடத்திற்க்கு சென்று வசுந்தரா விடம் என்ன பிரச்சனை என விசாரித்தார். கார்த்திக் நடந்த அனைத்தையும் கூறினார். பின் தமிழ், இந்த விஷயத்திற்காக வசுந்தரா விடம் பேசாமல் இருப்பது தவறு என சுட்டி காட்டினார். அப்போது தன் தமிழுக்கு கீதா தான் இரு பக்கமும் இருந்து இந்த பிரச்சனையை பெரிதாக்கியது என்று புறியவந்தது. உடனே கீதாவுக்கு அழைத்தார் ஆனால் கீதா அழைப்பை ஏர்க்கவில்லை. உடனே கீதா வீட்டிற்க்கு கிளம்பினர் தமிழ். அங்கு சென்று கீதாவை எச்சரித்தார். இல்லை என்றால் சந்திரகலாவிற்கு விஷயத்தை தெரிவித்து விடுவேன் என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….