கொரோனா நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் 9,195 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று!

Corona Updates In India 29 12 2021

Corona Updates In India 29 12 2021

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,195 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 302 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது இந்தியாவில் 4,80,592 ஆக உயர்ந்து இருக்கிறது.

இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் 7,347 பேர் இந்தியாவில் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி இருக்கின்றனர். தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 143 கோடியை நெருங்கி இருக்கிறது.
மீட்பு விகிதமும் தேசத்தில் 98.40 கோடியாக இருக்கிறது. இந்தியாவில் 62.9 சதவிகிதம் பேர் குறைந்தபட்சம் ஒரு தவணையாவது தடுப்பூசி எடுத்துக் கொண்டு இருக்கின்றனர்.

“ வெகுவிரைவாக பெருகி வரும் ஒமிக்ரான் தொற்றால் செய்வதறியாது திகைத்து வருகிறது உலக நாடுகள், இந்தியாவிலும் ஒமிக்ரான் 700-யைக் கடந்து இருப்பது குறிப்பிடத்தக்கது “

About Author