Raja Rani 2 Today Episode | 01.02.2022 | Vijaytv

Raja Rani 2.01.02.2022

Raja Rani 2.01.02.2022

ராஜா ராணி தொடரில் இன்று,சந்தியா நடந்த விஷயங்களை யோசித்துக்கொண்டே வீட்டுக்கு நடக்க ஆரம்பித்தார். ஆனால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. அப்போது காவல் நிலையத்தில் இருந்து அழைத்தார்கள். அவர் கேட்ட விவரங்கள் கிடைத்துவிட்டது என்று கூறியதும் உடனே விரைந்தார். அங்கு சென்று விசாரித்ததும் தான் அது அனைத்தும் அர்ச்சனாவின் சதி என்று. அர்ச்சனா வீட்டு முகவரியும், அர்ச்சனாவின் தங்கை பிரியா மூலமாக தான் இந்த புகாரை செய்து உள்ளார் என்று தெரிய வந்தது. பின் வீட்டுக்கு கிளம்பினார். இதற்கிடையில் வீட்டில் வேலை அதிகமாக இருக்கிறது என்று சிவகாமி கடைக்கு அழைத்தார். சந்தியாவை வீட்டுக்கு அனுப்புமாறு கூறினார். சரவணன் சந்தியா இங்கு வரவே இல்லையே என்று யோசித்தார். ஆனால் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் பக்கத்தில் ஒரு வேலையாக அனைப்பி உள்ளேன் என்று கூறி சமாளித்தார். சிவகாமியும் அதை நம்பினார். ஆனால் சரவணன் யோசித்தார், சந்தியா எதற்கு பொய் சொல்ல வேண்டும் என்று. அர்ச்சனா தன் தங்கைக்கு அழைத்து தான் செய்த நாடகத்தை பற்றி கூறினார். அம்மாவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக கூறியதால் அதே போல் பேசி அவர்களை நம்பும் பாடி செய்ய சொன்னார். அதன் படியே பிரியாவும் அந்த வழியாக வருவது போல் சிவகாமியை பார்த்து அம்மா இன்னும் மருத்துவமனையில் தான் உள்ளார் என்பதை போல் பேசினார். பின் தன் வேலை முடிந்தது என்று கிளம்பினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author