Eeramana Rojave 2 Today Episode | 09.02.2022 | Vijaytv

Eeramana Rojave 2.09.02.2022

Eeramana Rojave 2.09.02.2022

ஈரமான ரோஜாவே தொடரில் இன்று, ஜீவா காரை மெக்கானிக் சரி செய்தார். காவ்யா பதறினார் வீட்டில் என்ன நிலமை என்று தெரியவில்லையே என்று. பின் சரி செய்த காரில் இருவரும் வீட்டுக்கு கிளம்பினார்கள். வீட்டில் பிரியா காவ்யாவின் நண்பர்களுக்கு ஒருவர் விடாமல் அழைத்து விசாரித்துக்கொண்டு இருந்தார். அம்மா அப்பா இருவரும் பதட்டமாக இருந்தார்கள். காவ்யா வந்ததும் மன்னிப்பு கேட்டார். தன் ஃபோன் பேட்டரி இல்லாமல் அமந்துவிட்டதாக கூறினார். பின் மழை வந்ததால் வந்த வண்டி நின்றுவிட்டது அதனால் வர தாமதம் என்று கண்டதை சொல்லி சமாளித்தார். பின் பிரியாவும் இவருக்கு பரிந்து பேசி அம்மா அப்பாவை சமாளித்து அனுப்பினார். அடுத்த நாள் பார்த்திபன் மற்றும் பார்வதி இருவரும் கோவிலுக்கு வந்தார்கள். அங்கு தன் மகன் திருமணம் எந்த குறையும், பிரச்சனையும் இல்லாமல் நடக்க வேண்டும். தேவி மற்றும் ரம்யா வால் எந்த பிரச்சனையும் வர கூடாது என்று வேண்டிக்கொண்டார். அந்த கோவிலுக்கு பிரியாவும் வந்து இருந்தார். பிரியாவை பார்த்து பேசினார்கள். அன்னதானம் மிஞ்சியதால் அதை வாங்கி இல்லத்திற்கு கொடுக்க வந்தேன் என்றார். அதை கேட்ட இருவரும் பெருமைபட்டார்கள். அடுத்த என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author