Mouna Ragam 2 Today Episode | 15.02.2022 | Vijaytv

Mouna Ragam 2.15.02.2022

Mouna Ragam 2.15.02.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, தருண் மற்றும் ஸ்ருதி இருவரும் கார்த்திக் வீட்டில் இருந்து மனோகர் வீட்டிற்க்கு வந்து சேர்ந்தார்கள். அவர்கள் வந்ததும் ஒரு நல்ல விஷயம் சொல்வதாக மனோகர் கூறியிருந்தார். பின் அவர்கள் வந்ததும் பேச ஆரம்பித்தார். கஸ்தூரி பெயரில் ஒரு பாட்டுப்பள்ளி ஆரம்பிக்க போவதாக கூறினார். இதை கேட்ட ஷீலா தருண் மற்றும் ஸ்ருதி அனைவருமே ஆச்சரியமாக பார்த்தார்கள். சந்தோசம் கொண்டார்கள். தருண் இருக்கும் வேலையில் இதையும் எடுத்து நடத்த கஷ்டமாக இருக்குமே என்று கூறினார். அதற்கு மனோகர், அதை பற்றி கவலை பட வேண்டாம் அதை நடத்தப்போவது சத்யா தான் என்று கூறினார். தருண் உடனே அவருக்கு வாழ்த்து சொல்லி வேறு எதும் விவரங்கள் வேண்டும் என்றால் என்னிடம் கேட்கலாம் என்று கூறினார். சத்யா தான் நடத்த போகிறார் என்று கூறியதும் ஸ்ருதிக்கு கோவம் வந்தது. ஷீலா உடனே சத்யா இந்த சின்ன வயதில் இதெல்லாம் அவளால் முடியுமா என்று கேட்டார்.அதான் வருண் இருக்கான், நன் இருக்கேன் வேறு என்ன துணை வேண்டும், எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என்று கூறினார். வருண் எந்த இடத்தில் அந்த பள்ளியை ஆரம்பிக்கலாம் என்று சத்யாவிடம் கேட்டார். சத்யா தனக்காக வருண் எல்லாமே பார்த்து பார்த்து செய்வதை நினைத்து கண் கலங்கினார். நீ இந்த வீட்டில் அனைவரையும் பாசமாக கவனித்துக்கொள்கிறாய் அதனால் அதற்கு முன் இதெல்லாம் பெரிய விஷயம் இல்லை என்று கூறினார். சத்யாவுக்கு மட்டும் இந்த வீட்டில் தனி மரியாதை இருப்பதால் ஸ்ருதி தன் கோவத்தை எப்படி யார் மேல் காட்டுவது என்று தெரியாமல் இருந்தார். தருண் இடம் பேச முயற்சித்தார் ஆனால் அவர் தனக்கு வேலை இருப்பதாக சொல்லி ஒதுங்கி சென்றார். உடனே சத்யாவுக்கு மட்டும் எதற்காக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று கோவமாக கேட்டார். தான் என்ன தவறு செய்தேன் என்று கேட்டார். உடனே தருண் என்னை மிரட்டி திருமணம் செய்து கொண்டதால், மிரட்டி அன்பையும் வாங்கி விடலாம் என்று நினைக்க வேண்டாம் என்று கடுமையாக பேசினார். சத்யா மீது இருக்கும் காதல் இன்னும் போகவில்லயோ என்று கேட்டார். இதை கேட்டதும் மீண்டும் தருண் கோவத்தில் அந்த இடத்தில் இருந்து கிளம்பினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க..

About Author