Eeramana Rojave 2 Today Episode | 15.02.2022 | Vijaytv

eeramana Rojave 2.15.02.2022

eeramana Rojave 2.15.02.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபன் நிச்சயதார்த்தம் நடக்கப்போவதால் வீட்டில் அனைவருக்கும் புது துணிகள் வாங்கிக்கொடுத்தார் அருணாச்சலம்.தேவி மற்றும் ரம்யாவுக்கும் வாங்கி வந்து இருந்தார். அதை கொடுக்கும்போது, எப்போதும் போல் தேவி கோபப்பட்டு கத்தினார். தன் மகள் விரும்பும் பார்த்திபனை வேறு யாருக்கோ திருமணம் செய்து வைக்க எனக்கே புது துணி எடுத்து தருவாயா என்று கத்தினார். அவர் கொடுத்த துணிகளை தூக்கி வீசினார். ரம்யா எந்நேரமும் அழுதுகொண்டே இருந்தார். காவ்யா மற்றும் ஜீவா இருவரும் எப்போதும் சந்திக்கும் கோவிலுக்கு சென்று சந்தித்தார்கள். அங்கு எப்போதும் பொல் தன் வால் தனத்தை சேட்டைகளை செய்தார் ஜீவா. அதை காவ்யா விளையாட்டாக கண்டித்தார். பிரியா நடந்தது செல்லும்போது ஒரு பெண் அவரை பின்தொடர்ந்து வந்தார். அந்த பெண் மீராவால் அனுப்பபட்டவர். பிரியாவின் அழகை சிதைக்க வேண்டும் என்று திட்டம் போட்டு அவர் மீது ஆசிட் வீச்சு நடத்த பணம் கொடுத்து அந்த அபெண்ணை ஏற்பாடு செய்து உள்ளார். ஒரு முறை அவர் அடிக்கவும் செய்தார் ஆனால் அது குறி தவறுதலாக போனதால் பிரியா தப்பித்தார். பின் பிரியா அங்கு பொம்மைகள் விற்கும் குழந்தைகளை பார்த்து பள்ளிக்கு செல்லவில்லயா என்று விசாய்ர்தார். அவர்கள் போக ஆசை தான் ஆனால் எங்கள் ஓனர் எங்களை அடிப்பார் அதனால் இந்த வேலையை செய்கிறோம் என்று கூறினார்கள். இதை கேட்டதும் பிரியா, தன்னோடு வந்தால் நல்ல துணி சாப்பாடு பள்ளிக்கு செல்லலாம் என்னுடன் வருவீர்களா என்று கேட்டார். அதேக்குள் அந்த ரௌடி கும்பல் வந்து பிரியாவை மிரட்டினார்கள். பிரியாவும் எதிர்த்து பேசியதால் அவரை அடிக்க கை ஓங்கினர்கள். உடனே அங்கு பார்த்திபன் வந்து சேர்ந்தார். அவர்களை தடுத்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author